குடிபோதையில் 4வது மாடியின் பால்கனியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த இளம்பெண். அதிர்ச்சி வீடியோ
சீனாவில் குடிபோதையில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் 4வது மாடியில் உள்ள பால்கனி கம்பியில் தொங்கிக்கொண்டிருந்தபோது, அவர் கீழே விழுவதற்கு சில நொடிகள் முன்பு மீட்புப்படையினர் அவரது உயிரை காப்பாற்றினர்.
இந்த பரபரப்பான சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பெரும்பாலானோர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
கிழக்கு சீனாவில் உள்ள Changzhou என்ற நகரில் உள்ள அபார்ட்மெண்ட் வீடு ஒன்றில் நேற்று 20 வயது இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நான்காவது மாடியில் உள்ள பால்கனி தடுப்புக்கம்பியின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் சாய்ந்து கொண்டிருந்த கம்பி வளைந்ததால், அவர் நிலைகுலைந்து மற்றொரு கம்பியை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தார்.
அவரது நிலையை கண்டு பக்கத்து வீட்டினர் காவல்துறையினர்களுக்கும், தீயணைப்புப்படையினர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.அவரை தாங்கிக்கொண்டிருந்த கம்பி எந்நேரமும் கீழே விழுந்துவிடும் அபாயம் இருந்தது. அவர் கம்பியின் பேலன்ஸ்ஸை இழந்து கீழே விழுவதற்கு சில நொடிகளுக்கு முன், அதிரடியாக நுழைந்த தீயணைப்பு மீட்புப்படையினர் அவரைப் பிடித்து மேலே இழுத்தனர்.
பின்னர் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுத்து யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளது.